Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்: பண்பாட்டு மக்கள் தொடர்பகம் கருத்துக் கணிப்பு

ஏப்ரல் 06, 2019 05:01

சென்னை: தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களின் மனநிலையை அறியும் பொருட்டு பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடத் தொடங்கி உள்ளன. 

சென்னை நிருபர்கள் சங்கத்தில்  பண்பாட்டு மக்கள் தொடர்பகம் சார்பாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள்,  பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் மூலம் தெரிவித்தனர் 

அதிமுக கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளிலும், அமமுக 1 முதல் 2 தொகுதிகள் வரை பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.  

இதேபோல் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில், திமுகவுக்கு 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. 

குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுவையில் 21 ஆயிரத்து 464 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக பண்பாட்டு மக்கள் தொடர்பகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்